ரோஹண விஜேவீரவின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு மகிந்தவிற்கு இல்லை: சாடும் எம்.பி

SJB Ajith Perera Mahinda Rajapaksa Janatha Vimukthi Peramuna
By Sathangani Oct 07, 2025 05:59 AM GMT
Report

ரோஹண விஜேவீர (Rohana Wijeweera) உயிரிழந்த பின்னர் அவரது குடும்பத்துக்கான பாதுகாப்பு இன்று வரை சகல அரசாங்கங்களாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் (Mahinda Rajapaksa) பாதுகாப்பை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா (Ajith P. Perera) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “நிறைவேற்றப்பட்டுள்ள ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகளை நீக்கும் சட்டத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும். ஆனால் நாட்டு பிரஜை என்ற ரீதியில் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பில் அவருக்குள்ள உரிமையை நீக்க முடியாது.

மகிந்தவுக்கு தூக்குத் தண்டனை - தலைவர் பிரபாகரனை காப்பாற்றிய போர் நிறுத்தம்: சரத் பொன்சேகா

மகிந்தவுக்கு தூக்குத் தண்டனை - தலைவர் பிரபாகரனை காப்பாற்றிய போர் நிறுத்தம்: சரத் பொன்சேகா

சகல அரசாங்கங்கள் 

முன்னாள் ஜனாதிபதியான அவரது ஓய்வூதியம், சிறப்புரிமைகள் என்பன நீக்கப்பட்டாலும் அவரது பாதுகாப்பு பலவீனப்படுத்தப்படுவதை அங்கீகரிக்க முடியாது. யுத்தத்தை நிறைவு செய்வதற்கு தலைமைத்துவத்தை வகித்தவர் என்ற அடிப்படையில் கடந்த அரசாங்கங்களானாலும், தற்போதைய அரசாங்கமானாலும், எதிர்கால அரசாங்கங்களானாலும் அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய பொறுப்பை கொண்டிருக்கின்றன.

ரோஹண விஜேவீரவின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு மகிந்தவிற்கு இல்லை: சாடும் எம்.பி | Rohana S Family Was Provided Security Not Mahinda

எனவே அரசியல் பழிவாங்கலுக்காக அவரது பாதுகாப்பு நீக்கப்படுவது தவறான ஒரு முன்னுதாரணமாகும். ரோஹண விஜேவீர உயிரிழந்த பின்னர் அவரது குடும்பத்துக்கான பாதுகாப்பு இன்று வரை சகல அரசாங்கங்களாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

எந்த அரசாங்கமானாலும் நாட்டு பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அத்தியாவசியமானதாகும். ரோஹண விஜேவீரவின் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது எனில், மகிந்த ராஜபக்சவுக்கும் பாதுகாப்பை வழங்குவதில் எவ்வித சிக்கலும் இல்லை.

பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நீதிபதிகளின் சம்பளம் : எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நீதிபதிகளின் சம்பளம் : எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

கடந்த இரு தேர்தல்களிலும் நாட்டு மக்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை பிரதான காரணியாகக் கொண்டு தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்திருந்தனர். ஆனால் அரசாங்கத்தால் அது தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ரோஹண விஜேவீரவின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு மகிந்தவிற்கு இல்லை: சாடும் எம்.பி | Rohana S Family Was Provided Security Not Mahinda 

பிரதான சூத்திரதாரிகள் இன்று வரை வெளிப்படுத்தப்படவில்லை. முக்கிய சாட்சிகளை வெளிப்படுத்துவதில் இந்த அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. கால அவகாசத்தைக் குறிப்பிட்டு வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளைப் பெற்ற பின்னர், அதனை கைவிட்டுள்ளனர்.

இனிவரும் தேர்தல்களின் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையோருக்கு தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி வேட்பாளர்கள் வாக்குறுதியளிப்பதற்கு இடமளிக்காமல், உண்மைகளை கண்டறிந்து நாட்டுக்கு வெளிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என தெரிவித்தார்.

சற்று முன்னர் ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள்

சற்று முன்னர் ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015