மெஸ்ஸியா... ரொனால்டோவா... இன்று யாருடைய வெற்றி - எதிர்பார்ப்பில் மக்கள்
உலகின் முன்னணிக் கால்பந்து நட்சத்திரங்களான லியோனஸ் மெஸ்ஸியும் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் மோதும் ஆட்டத்தை காணும் எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்து வருகிறது.
இந்த ஆட்டமானது இன்று வியாழக்கிழமை பின்னிரவு 1 மணிக்கு சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் இடம்பெறுகிறது.
சவுதி அணியில் அந்நாட்டின் அல் நாசர் குழுவையும் அல் ஹிலால் குழுவையும் சேர்ந்த விளையாட்டாளர்கள் இடம்பெறுவர். அவர்களில் அல் நாசர் (Al Nassr) அணியைச் சேர்ந்த ரொனால்டோவும் ஒருவர்.
பெரும் எதிர்பார்ப்பு
கிறிஸ்டியானோ ரொனால்டோ சவூதி அரேபியாவின் அல்-நஸ்ர் கிளப்பில் இணைந்த பிறகு, அவர் தனது அணியுடன் ஒரு நட்பு ஆட்டத்தில் லியோனல் மெஸ்ஸியை எதிர்கொள்ள உள்ளார்.
லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் ஒரு கால்பந்து ஆடுகளத்தில் சந்திக்கும் ஆட்டத்தை மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காண ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.