அமெரிக்கா - இஸ்ரேலுக்கு சாட்டையடி! பதற்றத்திற்கு மத்தியில் வந்த ரஷ்யாவின் அறிவிப்பு
ஈரானின் அணுத் திட்டங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களைத் தெளிவாகக் கண்டிப்பதோடு, ஈரானுடனான கூட்டுறவை மேலும் வலுப்படுத்துவோம் என்று ரஷ்யா அறிவித்துள்ளது.
ரஷ்யா, தனது மூத்த கூட்டாளியான ஈரானுக்கு போதுமான ஆதரவு அளிக்கவில்லை என விமர்சனங்கள் வெளியான பிறகு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல்
ரஷ்ய அரசின் பேச்சாளர் திமித்ரி பெஸ்கோவ், இது தொடர்பாகக் கூறும்போது, “மொஸ்கோவும் தெஹ்ரானும் இடையே உள்ள உறவை பாதிக்க சிலர் திட்டமிட்டு புகைப்படமிட்டுவிட முயல்கிறார்கள்.
ஆனால், ரஷ்யா தனது நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களை நாம் கண்டிக்கிறோம்,” என தெரிவித்துள்ளார்.
ரஷ்யா–ஈரான் உறவு
பெஸ்கொவ் மேலும் கூறியதாவது, "மொஸ்கோவில் இடம்பெற்ற இருநாட்டு பேச்சுவார்த்தைகளில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ரஷ்யாவின் பங்கிற்கு உயரிய மதிப்பீட்டை வழங்கியுள்ளார். அவர்கள் ரஷ்யாவின் அணுகுமுறையை பாராட்டியிருக்கிறார்கள்” என்றார்.
இதன் மூலம், ரஷ்யா–ஈரான் உறவுகளை சிதைக்கும் முயற்சிகள் பல உள்ளபோதிலும், இருநாடுகளும் அவைகளை மீறி உறவுகளை மேலும் வலுப்படுத்தும் பாதையில் செல்கின்றன என்பதையே ரஷ்யா தெளிவாக கூறியுள்ளதான சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
