உலக போரியல் வரலாற்றில் முதல்முறை : உக்ரைன் ரோபோக்களிடம் சரணடைந்த ரஷ்ய வீரர்கள்
ரஷ்ய இராணுவ வீரர்கள் குழு ஒன்றை, உக்ரைனின் தரைவழி ரோபோக்கள் சரணடைய வைத்துள்ள நிகழ்வு உக்ரைனின் போர் கள தொழில்நுட்பங்கள் உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ள அதேவேளை இந்த சம்பவம் உலக போரியல் வரலாற்றில் முதன்முறை என தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் நடந்த ஒரு மோதலில், உக்ரைன் இராணுவம் போர்க்களத்தில் பயன்படுத்திய அதிநவீன மற்றும் ஆயுதம் ஏந்திய ரோபோக்கள் ரஷ்ய ராணுவ நிலைகளை சூழ்ந்து கொண்டன. இந்த ரோபோக்களின் துல்லிய தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல், ரஷ்ய வீரர்கள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, யு.ஜி.வி., எனும் தரைவழி ரோபோக்களிடம் சரணடைந்ததாக தகல்கள் தெரிவிக்கின்றன.
ரோபோக்களை பயன்படுத்தி கைப்பற்றப்பட்ட இராணுவ நிலை
போர் தொடங்கியதில் இருந்து முதல்முறையாக, உக்ரைன் படைகள் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஆளில்லா தரைவழி ரோபோக்களை மட்டுமே பயன்படுத்தி, ஒரு ரஷ்ய இராணுவ நிலையை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளதாவது,
நவீன போர்முறையில் உக்ரைன் முன்னணியில்
இது வெறும் தொழில்நுட்ப முன்னேற்றம் மட்டுமல்ல; இது, தீமையை கண்டறிவது மற்றும் அதை எதிர்கொள்வது பற்றியது. எங்கள் வீரர்களின் உயிரை பாதுகாக்க தொழில்நுட்பத்தை பயன் படுத்துகிறோம். இயந்திரங்கள் போரிடுவதால், மனித உயிர்கள் காக்கப்படுகின்றன.

நவீன போர்முறையில் உக்ரைன் முன்னணியில் உள்ளது. ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக, 'ஸ்மார்ட்' போர்முறையை தொடர்ந்து கடைப் பிடிப்போம் என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |