“உக்ரைன் போர்க்களம்” 1200 கிலோ மீற்றர் தனியே பயணித்த சிறுவனின் துணி்ச்சல் கதை இது! (காணொளி)
உக்ரைனில் ரஸ்ய படையினரின் தாக்குதல் காரணமாக இடம்பெயர்ந்தவர்களில் 11 வயது சிறுவன் தொடர்பில் இதயத்தை உறையச் செய்யும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
11வயதான ஹாசன் என்ற சிறுவன் பெற்றோர் இன்றி தனியே 1200 கிலோ மீற்றர் ஏதிகளுடன் பயணித்து சுலோவோக்கியாவுக்கு சென்றுள்ள செய்தியே அதுவாகும்.
தமது பாட்டியை தனியே வீட்டில் விட்டு வர முடியாத நிலையில் தமது தாயார் தம்மை வீட்டுக்கு அருகில் உள்ளவர்களுடன் இரண்டு சிறிய பைகள் மற்றும் கடவுச்சீட்டுடன் சுலோவேக்கியாவுக்கு தம்மை அனுப்பியதாக சிறுவன் தெரிவித்துள்ளார்.
சுலோவேக்கியாவுக்கு சென்ற பின்னர், சிறுவன் உறவினர்களுடன் தொடர்புக்கொள்வதற்காக அவரது கையில் சுலோவேக்கியாவில் உள்ள உறவினர்களின் தொலைபேசி இலக்கங்களையும் அவரது தாயார் குறித்து அனுப்பியுள்ளார்.
இதேவேளை பெரும்பாலான இடங்களில் குடும்பத் தலைவர்கள், தமது மனைவிமாரையும் குழந்தைகளையும் எல்லை வரை அழைத்து வந்து வேறு நாடுகளுக்கு அனுப்பிய பின்னர் நாட்டுக்காக போராடப்போவதாக கூறி மீண்டும் தமது நகரங்களுக்கு செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில் ரஷ்யாவின் படையெடுப்பு ஆரம்பித்த பின்னர் உக்ரைனில் இருந்து வெளியேறிய இரண்டு மில்லியன் மக்களில் 800,000 குழந்தைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக சேவ் தி சில்ட்ரன் தெரிவித்துள்ளது.