முன்மொழியப்பட்ட வரி திருத்தங்கள்: அரசாங்கத்தின் மீது சஜித் குற்றச்சாட்டு
நாட்டில் முன்மொழியப்பட்ட பெறுமதிசேர் வரி (VAT) திருத்தங்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) சமூக ஊடக தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கண்ட விடயத்தை கூறியுள்ளார்.
எதிர்வரும் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் இந்த விரிவான வரி மாற்றங்கள், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்குப் பதிலாக வணிகங்களை பாதிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார வளர்ச்சியை உருவாக்க முடியாது
மேலும், இலங்கை அரசு பெறுமதிசேர் வரி வரியின் வரம்பை விரிவுபடுத்துவதோடு, வரி விகிதங்களை உயர்த்தி, நடைமுறையையும் ஒரே நேரத்தில் கடுமையாக்க முயற்சிக்கிறது எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த மாற்றங்கள் காரணமாக சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், நிதிச் சேவைகள் அதிக வரிச்சுமையை எதிர்கொள்கின்றன என்றும், டிஜிட்டல் பொருளாதாரமும் இதன் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இது சீர்திருத்தம் அல்ல, இது சுரண்டல். வரி விதிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை உருவாக்க முடியாது. வணிகங்களுக்கு சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டால், அவை உயிர்வாழவும் செழிக்கவும் முடியாது,” என்று அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |