உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சஜித்தும் குற்றவாளி! கோட்டாபயவால் அழிக்கப்பட்ட அறிக்கைகள் - பிமல் காட்டம்

Gotabaya Rajapaksa Pillayan Sajith Premadasa Easter Attack Sri Lanka
By Dharu Apr 09, 2026 12:26 PM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சதித்திட்டங்கள் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது எனவும் கம்பன்பில போன்ற குற்றவாளிகளை காப்பாற்ற எதிர்க்கட்சி தலைவர் கைகோர்த்து நிற்பது கண்டிக்கத்தக்கது என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் நாடாளுடமன்றில் இன்று(09.04.2026) கருத்து தெரிவித்த அவர்,

'உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ராஜபக்சர்கள் செய்த சதி என்பது வெளிப்படையாக அம்பலமாகியுள்ளது. தேர்தலை வெற்றி பெற அவர்களால் தீட்டப்பட்ட சதி என்ற உண்மை வெளிவந்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னரே அறிந்திருந்த பிள்ளையான் : அம்பலப்படுத்திய அமைச்சர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னரே அறிந்திருந்த பிள்ளையான் : அம்பலப்படுத்திய அமைச்சர்

முக்கிய சதிகாரர்கள்

இவற்றின் முக்கிய சதிகாரர்களை வெளிப்படுத்தி உண்மைகளை கொண்டுவருவதே எமது கட்சியின் நோக்கமாக உள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சஜித்தும் குற்றவாளி! கோட்டாபயவால் அழிக்கப்பட்ட அறிக்கைகள் - பிமல் காட்டம் | Sajith Gets Embroiled Easter Attack Investigation

அதற்கு ஏற்ப விசாரணை நடக்கின்றது. இந்த தாக்குதலை மேற்கொள்ள மூன்று திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. அதில் முதல் திட்டமும் முன்றாவது திட்டமும் முக்கியமானவை.

இவை அனைத்தும் நல்லாட்சி காலத்தில் நடைபெற்ற குற்றங்கள். அதற்கான விசாரணைகளை அவர்கள் சரிவர முன்னெடுக்கவில்லை. அதனையே தற்போது எமது அரசாங்கம் முன்னெடுக்கிறது.

அப்போது அரசாங்கத்தில் உள்ளவர்கள் விசாரணை அதிகாரிகளையும், அவர்களின் அறிக்கைகளையும் புறக்கணித்தனர். இதற்கு அப்போது ஆட்சியில் இருந்த ரணில் விக்ரமசிங்கவும் ஒத்துழைத்தார்.

விசாரணைகளை புறக்கணித்தார். இதனை ராஜபக்சர்கள் சாதகமாக்கிக்கொண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். இறுதியில் படுகொலையாளிகளே ஆட்சியாளர்களாக மாறினர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் அம்பலமான கோட்டாபயவின் பெயர்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் அம்பலமான கோட்டாபயவின் பெயர்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

இதன் பின்னர் உயிர்த்த ஞாயிறு சதித்திட்டவாதிகள் அனைவரும் பதவிக்கு வந்தனர். சுரேஸ் சலே போன்றோர் அதிகாரத்துக்கு வந்தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சஜித்தும் குற்றவாளி! கோட்டாபயவால் அழிக்கப்பட்ட அறிக்கைகள் - பிமல் காட்டம் | Sajith Gets Embroiled Easter Attack Investigation

திட்டம் தீட்டியவர்களே பதவியை பெற்றனர். இறுதியில் அவ்வளவு காலமும் திரட்டப்பட்ட சாட்சிகளை அழித்தார்கள். விசாரணையாளர்கள் மாற்றப்பட்டனர்.

படுகொலையின் விசாரணையை நல்லாட்சி அரசாங்கம் திரம்பட செய்யவில்லை. இறுதியில் 37000 பக்கங்கள் கொண்ட ஆணைக்குழு அறிக்கையை எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்து பெற்றுக்கொண்டது. 10 குழுக்களால் தயாரிக்கப்பட்ட அறிக்கை அது.

அதில் குறிப்பாக சானி அபேசேகர, ரவி செனவிரத்ன போன்றோர் பல உண்மைகளை கண்டறிந்தனர். இதனை வெளியிடாமல் இருக்க காரணம் உள்ளது.

ஏழு ஈஸ்டர்கள் கண்ணீரைச் சிந்தியும் இன்னும் சூத்திரதாரி தென்படவில்லை...

ஏழு ஈஸ்டர்கள் கண்ணீரைச் சிந்தியும் இன்னும் சூத்திரதாரி தென்படவில்லை...

சட்டமா அதிபருக்கு அறிக்கை

சூத்திரதாரிகள் இதனால் தப்பிக்ககூடும். அதனால் சட்டமா அதிபருக்கு அதனை அளிக்க தயாராக உள்ளோம். இதனுடன் தொடர்புடைய மேலும் பல புலனாய்வு அதிகாரிகளையும், தொடர்புடைய அரசியல் சதிகாரிகளையும் கைது செய்யவுள்ளோம்.

விசாரணையை சரியான திசைக்கு கொண்டு செல்கின்றோம். இப்போது படுகொலையாளிகளுடன் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தொடர்பில் உள்ளார். நல்லாட்சி காலத்தில் சஜித் முக்கிய பதவியில் இருந்தர்.

பார்க்கபோனால் இதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டிய பொருப்பில் இருந்தவர் சஜித்.  ஆக அதனை தடுக்காததால் சஜித்தும் குற்றவாளிதான்.

சஜித் அரசியல் பொறுப்பை தவறவிட்டவர் கம்பன்பில தாக்குதலில் முக்கியஸ்தர். இன்று அவருக்கு ஆதரவாக சென்று நிற்கின்றார்.” என கூறியுள்ளார். 

உயிர்த்த ஞாயிறு பிரதான சூத்திரதாரி..! வெகுவிரைவில் வெளிவரும் உண்மை: ரில்வின் சில்வா

உயிர்த்த ஞாயிறு பிரதான சூத்திரதாரி..! வெகுவிரைவில் வெளிவரும் உண்மை: ரில்வின் சில்வா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019