உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சஜித்தும் குற்றவாளி! கோட்டாபயவால் அழிக்கப்பட்ட அறிக்கைகள் - பிமல் காட்டம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சதித்திட்டங்கள் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது எனவும் கம்பன்பில போன்ற குற்றவாளிகளை காப்பாற்ற எதிர்க்கட்சி தலைவர் கைகோர்த்து நிற்பது கண்டிக்கத்தக்கது என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் நாடாளுடமன்றில் இன்று(09.04.2026) கருத்து தெரிவித்த அவர்,
'உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ராஜபக்சர்கள் செய்த சதி என்பது வெளிப்படையாக அம்பலமாகியுள்ளது. தேர்தலை வெற்றி பெற அவர்களால் தீட்டப்பட்ட சதி என்ற உண்மை வெளிவந்துள்ளது.
முக்கிய சதிகாரர்கள்
இவற்றின் முக்கிய சதிகாரர்களை வெளிப்படுத்தி உண்மைகளை கொண்டுவருவதே எமது கட்சியின் நோக்கமாக உள்ளது.

அதற்கு ஏற்ப விசாரணை நடக்கின்றது. இந்த தாக்குதலை மேற்கொள்ள மூன்று திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. அதில் முதல் திட்டமும் முன்றாவது திட்டமும் முக்கியமானவை.
இவை அனைத்தும் நல்லாட்சி காலத்தில் நடைபெற்ற குற்றங்கள். அதற்கான விசாரணைகளை அவர்கள் சரிவர முன்னெடுக்கவில்லை. அதனையே தற்போது எமது அரசாங்கம் முன்னெடுக்கிறது.
அப்போது அரசாங்கத்தில் உள்ளவர்கள் விசாரணை அதிகாரிகளையும், அவர்களின் அறிக்கைகளையும் புறக்கணித்தனர். இதற்கு அப்போது ஆட்சியில் இருந்த ரணில் விக்ரமசிங்கவும் ஒத்துழைத்தார்.
விசாரணைகளை புறக்கணித்தார். இதனை ராஜபக்சர்கள் சாதகமாக்கிக்கொண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். இறுதியில் படுகொலையாளிகளே ஆட்சியாளர்களாக மாறினர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
இதன் பின்னர் உயிர்த்த ஞாயிறு சதித்திட்டவாதிகள் அனைவரும் பதவிக்கு வந்தனர். சுரேஸ் சலே போன்றோர் அதிகாரத்துக்கு வந்தனர்.

திட்டம் தீட்டியவர்களே பதவியை பெற்றனர். இறுதியில் அவ்வளவு காலமும் திரட்டப்பட்ட சாட்சிகளை அழித்தார்கள். விசாரணையாளர்கள் மாற்றப்பட்டனர்.
படுகொலையின் விசாரணையை நல்லாட்சி அரசாங்கம் திரம்பட செய்யவில்லை. இறுதியில் 37000 பக்கங்கள் கொண்ட ஆணைக்குழு அறிக்கையை எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்து பெற்றுக்கொண்டது. 10 குழுக்களால் தயாரிக்கப்பட்ட அறிக்கை அது.
அதில் குறிப்பாக சானி அபேசேகர, ரவி செனவிரத்ன போன்றோர் பல உண்மைகளை கண்டறிந்தனர். இதனை வெளியிடாமல் இருக்க காரணம் உள்ளது.
சட்டமா அதிபருக்கு அறிக்கை
சூத்திரதாரிகள் இதனால் தப்பிக்ககூடும். அதனால் சட்டமா அதிபருக்கு அதனை அளிக்க தயாராக உள்ளோம். இதனுடன் தொடர்புடைய மேலும் பல புலனாய்வு அதிகாரிகளையும், தொடர்புடைய அரசியல் சதிகாரிகளையும் கைது செய்யவுள்ளோம்.
விசாரணையை சரியான திசைக்கு கொண்டு செல்கின்றோம். இப்போது படுகொலையாளிகளுடன் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தொடர்பில் உள்ளார். நல்லாட்சி காலத்தில் சஜித் முக்கிய பதவியில் இருந்தர்.
பார்க்கபோனால் இதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டிய பொருப்பில் இருந்தவர் சஜித். ஆக அதனை தடுக்காததால் சஜித்தும் குற்றவாளிதான்.
சஜித் அரசியல் பொறுப்பை தவறவிட்டவர் கம்பன்பில தாக்குதலில் முக்கியஸ்தர். இன்று அவருக்கு ஆதரவாக சென்று நிற்கின்றார்.” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |