சிறி லங்கா அரசாங்கத்திற்கெதிராக 150 இடங்களில் போராட்டம் - ஐக்கிய மக்கள் சக்தி வகுத்துள்ள திட்டம்!
நாடு தழுவிய ரீதியில் அரசாங்கத்திற்கெதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மாபெரும் போரட்டங்களில் ஈடுபடவுள்ளது.
அந்த வகையில் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக நாடு பூராகவும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் 150 போராட்டங்களை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஏப்ரல் 07 ஆம் திகதி தேர்தல் தொகுதிகள் வாரியாக குறித்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இப்போராட்டங்களில் பங்கேற்று, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டமும், பேரணியும் கண்டியில் இடம்பெறவுள்ளது. அதன்பின்னர் ஜுன் 30 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் பிக்குகள் மாநாடு கொழும்பில் நடைபெறவுள்ளது.
டிசம்பர் மாதம் கட்சியின் தேசிய மாநாடு இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
