கர்மவினை தொடரும் : ராஜபக்சாக்களை கடுமையாக சாடும் சரத் பொன்சேகா!

Sarath Fonseka Sri Lanka Economic Crisis Rajapaksa Family
By Beulah Nov 21, 2023 04:23 PM GMT
Report

பொருளாதார படுகொலையாளிகளை நீதிமன்றம் பகிரங்கப்படுத்தியுள்ளது, இந்த குற்றத்தை தேச துரோக செயற்பாடாக கருத வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (21) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,

சிங்களமயமாகும் யாழ். பல்கலை : விரிவுரையாளர் அபாய எச்சரிக்கை

சிங்களமயமாகும் யாழ். பல்கலை : விரிவுரையாளர் அபாய எச்சரிக்கை

வரவு - செலவு திட்டம்

“2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பல முன்மொழிவுகளை அதிபர் முன்வைத்துள்ளார். இந்த முன்மொழிவுகள் வெற்றிப்பெற்றால் மக்களுக்கு நன்மை பயக்கும்.

கர்மவினை தொடரும் : ராஜபக்சாக்களை கடுமையாக சாடும் சரத் பொன்சேகா! | Sarath Fonseka About Mahinda Rajapaksa

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையில் அதிபர் இவ்வாறான பல முன்மொழிவுகளை வழங்கினால் ஆனால் அந்த முன்மொழிவுகள் ஏதும் செயற்படுத்தபடவில்லை.

அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தல்களை இலக்காக கொண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. தேர்தல் ஒன்று இடம்பெறுமாக இருந்தால் இவ்வாறான வாக்குறுதிகளை முன்வைக்கலாம்.

தேர்தலும் எப்போது இடம்பெறும் என்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

சமூக விரோத செயற்பாடுகள்

பொருளாதார பாதிப்பினால் சமூக விரோத செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தீவிரடைந்துள்ளன. பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கி தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்பது எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும்.

கர்மவினை தொடரும் : ராஜபக்சாக்களை கடுமையாக சாடும் சரத் பொன்சேகா! | Sarath Fonseka About Mahinda Rajapaksa

முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் நான் இரண்டரை வருடங்கள் சிறையில் இருந்தேன். அப்போது எனக்கு எதிராக நீதிமன்றத்தில் முன்னிலையான அப்போதைய பிரதி சொலிசிட்டர் ஜெனரால் 'எனது மருமகனின் வியாபாரம் தொடர்பில் நான் அறிந்திருக்க வேண்டும் ' என்று குறிப்பிட்டார்.

அவருக்கு அக்காலப்பகுதியில் உயர்நீதிமன்ற நீதியரசராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இவர் தான் தற்போது ராஜபக்சர்களை பொருளாதார படுகொலையாளிகள் என்று அடையாளப்படுத்தியுள்ளார்.

இதனையே கர்மவினை என்பார்கள்.ராஜபக்சர்களை கர்மவினை தொடரும், எதிர்காலத்திலும் பல சம்பவங்கள் நிகழும்.” என்றார்.

வடக்கு ஆளுநரிடம் எரிக் சொல்ஹெய்ம் வழங்கிய உறுதிமொழி

வடக்கு ஆளுநரிடம் எரிக் சொல்ஹெய்ம் வழங்கிய உறுதிமொழி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்