புலமைப்பரிசில் பரீட்சை - வெளியான முக்கிய அறிவிப்பு
எதிர்வரும் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன விரிவான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
இதன்படி பெருமளவானோர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக புலமைப்பரிசில் பரீட்சையில் இரண்டாம் பகுதிக்கான வினாத்தாளை முதலில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மனதளவில் பாதிப்பு
பரீட்சைகள் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
முதல் பகுதி சற்று கடினமானது என்பதால் மாணவர்கள் இரண்டாம் பகுதிக்கு விடையளிக்கும் போது மனதளவில் பாதிக்கப்படக்கூடும் என்பதை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அனுமதி அட்டை வழங்கப்படமாட்டாது
அத்துடன் இம்முறை பரீட்சை மண்டபத்திற்குள் செல்வதற்காக வழங்கப்படும் அனுமதி அட்டை வழங்கப்பட மாட்டாது.
மாணவர்கள் விடையளிக்கக் கூடிய நேரத்தை மீதப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக இம்முறை மாணவர்களின் வருகை பதிவு செய்வதற்கான ஆவணமொன்று மாத்திரமே பேணப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா
