பாடசாலை கட்டணம் அதிகரிக்கப்படவில்லை: கல்வி அமைச்சர்
பாடசாலை அபிவிருத்தி கட்டணங்கள் 50% அதிகரிப்பதாக கல்வி அமைச்சு எந்த தீர்மானங்களையும் எடுக்கவில்லை என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
டி.எஸ்.சேனநாயக்க கல்லூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை அபிவிருத்தி கட்டணங்கள் 50% அதிகரிப்பட்டதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையிலேயே கல்வி அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
திறைசேரி அனுமதி
மேலும், எதிர்வரும் 2024ஆம் ஆண்டிற்குள் பாடசாலைகளில் உள்ள அனைத்து அதிபர் வெற்றிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, கல்வித்துறையில் தற்போதுள்ள வெற்றிடங்களை தொடர்ச்சியாகவும் முறையாகவும் பேணுவதற்கு அவற்றை நிரப்புவது அவசியமானது என சுட்டிக்காட்டிய அமைச்சர், தற்போது கல்வி நிர்வாக சேவையில் 808 வெற்றிடங்கள் காணப்படுவதுடன் 50 வீதத்தை பூர்த்தி செய்வதற்கு திறைசேரி அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சலுகை விலை
அத்தோடு, குறித்த நிகழ்வில் இலங்கையின் முழு கல்வி முறைமையையும் டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கையில் 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்களை 30% சலுகை விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 7 நிமிடங்கள் முன்