350 ரூபாவை தாண்டிய டொலரின் பெறுமதி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு இன்றைய தினம் (21) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 354 இலங்கை ரூபாயைக் கடந்துள்ளதுடன், அது 354.03 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.
அதேநேரம், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 342.63 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களின் விலை
இது, கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 02ஆம் திகதிக்குப் பின்னர் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாய் பதிவு செய்த மிகக் குறைந்த மதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வெகுவாக அதிகரித்து வருவதால் அரிசி, பருப்பு, சீனி, வெங்காயம், உருளைக் கிழங்கு உள்ளிட்ட அத்தியா வசியப் பொருட்களின் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்பிருப்பதாக அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில், இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை அதிகரிப்பதற்குத் தீர்மானித்திருப்பதாக இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தொடர்ச்சியாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்து வருவதால், நடுத்தர மற்றும் வறிய குடும்பங்களின் அன்றாட உணவுப் பழக்கவழக்கங்கள் பெரிதும் பாதிக்கப்படும் என நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |