மோடியின் சந்திப்பில் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்ட தமிழர்கள் : அம்பலப்படுத்திய எம்.பி
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை (Narendra Modi) அரசாங்க தரப்பு சந்தித்த போது, அரசாங்க தரப்பினால் ஒரு சிறுபான்மை தமிழ் பேசும் உறுப்பினர் கூட சந்திப்பில் ஈடுபடுத்தப்பட்டிருக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) கடுமையாக சாடியுள்ளார்.
நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நல்ல காலம் வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எங்களது கட்சிகளுக்கு வாக்களித்தார்கள் காரணம் தேசிய மக்கள் சக்திக்கு மாத்திரம் தமிழ் மக்கள் வாக்களித்திருந்தால் இந்திய பிரதமரை சந்திக்க எங்களுக்கும் அங்கு வாய்ப்பு கிடைத்திருக்காது.
அதே, தேசிய மக்கள் சக்திக்கு மாத்திரம் தமிழ் மக்கள் வாக்களித்திருந்தால் சிங்கள உறுப்பினர்களை மாத்திரம் அழைத்து சென்று மோடியுடன் சந்திப்பு இடம்பெற்று, நாட்டில் சிங்களவர்கள் மட்டும்தான் இருக்கின்றார்கள் என மோடியை நினைக்க வைத்திருப்பார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மோடியின் சந்திப்பு, நடைபெறவுள்ள தேர்தல், தமிழ் மக்களின் வாக்குகள் மற்றும் தமிழ் தரப்பில் அரசியல் நகர்வு தொடர்பில் பலதரப்பட்ட கருத்துக்கள் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
