கடன் தொல்லையால் அவதிப்படுபவரா நீங்கள் - இதோ எளிய முறையில் அதற்கான பரிகாரங்கள்
இன்று எம்மில் பலருக்கு இருக்கும் மிகப்பெரிய சுமையே கொடுத்த கடனை திருப்பி கொடுக்க முடியாமல் அவதிப்படுவதாகும்.
என்னதான் கடன் என்பது இன்றைக்கு சர்வ சாதாரணமாக மாறிவிட்டாலும், கொடுத்த கடனை திருப்பி கொடுக்க முடியாவிட்டால் எம் ஒட்டு மொத்த நிம்மதியும் வாழ்க்கையும் பறிப்போனது போன்றதான உணர்வினை தருவதாக அமையும் எனலாம்.
கடன் விரைவில் அடைபட வேண்டும் என நினைப்பவர்கள் ஒரு சிறு தொகையையாவது செவ்வாய்கிழமையில் திருப்பி கொடுத்து விட வேண்டுமாம்.
அதாவது, கடன் விரைவில் அடைவதற்கான வழிபாட்டை செய்து விட்டு, இவ்வாறு செவ்வாய்கிழமையில் கடனை அடைப்பதற்கான முதற் படியை எடுத்து வைத்தால் கடன் அடைப்பதற்கான வழிகள் சீக்கிரம் பிறக்கும்.ஏதாவது ஒரு வகையில் பணம் வந்து, கடனை அடைக்க முடியும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
கடன் தீர பரிகாரம்

பலருக்கும் கடன் பிரச்சனை என்பது பெரிய பிரச்சனையாக இருந்து கொண்டே இருக்கும். கடனை அடைப்பதற்காக எவ்வளவு முயற்சி எடுத்தாலும் எதுவும் பலன் அழிக்கவில்லை.
கடனை எப்படியாவது அடைக்க வேண்டும் என முயற்சித்து பணத்தை சேர்த்து வைத்தால் அதற்கு வேறு ஏதாவது செலவு வந்த விடுகிறது.
இதனால் கடன் இருந்து கொண்டே இருக்கிறது என புலம்புபவர்களை தான் அதிகமாக பார்க்க முடியும்.
கடன் பிரச்சனைக்கு வழிபட வேண்டிய தெய்வம்

இப்படி அதிகப்படியான கடனால் பாதிக்கப்பட்டு, அவதிப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் முருகப்பெருமானை தொடர்ந்து வணங்கி வருவது சிறப்பானதாகும்.
முருகனிடம் மனம் உருகி என்ன வேண்டிக் கொண்டால் அதை அவர் நிறைவேற்றாமல் இருக்க மாட்டார்.
கடன், நோய், எதிரிகள் தொல்லை, வீடு மற்றும் மனை தொடர்பான பிரச்சனை, திருமணம், குழந்தை பேறு என எதில் பிரச்சனை இருந்தாலும் அதை கந்தக் கடவுளிடம் சொல்லி முறையிட்டால் உடனடியாக அந்த பிரச்சனை தீருவதற்கான வழி பிறக்கும்.
கடன் தீர பரிகாரம்

மாதந்தோறும் வரும் கார்த்திகை நட்சத்திர நாளில் வீட்டில் உள்ள முருகப் பெருமானின் படத்தை சுத்தம் செய்து, செவ்வரளி மாலை சூட்ட வேண்டும்.
அகல் விளக்கில் நெய் ஊற்றி விளக்கேற்றி வைக்க வேண்டும். பிறகு துவரம் பருப்பினை வாங்கி முருகனின் படத்திற்கு முன்பு வைத்து வழிபட வேண்டும்.
துயரங்களை போக்கக் கூடியது துவரை என்பார்கள்.
ஏதாவது ஒரு செம்பினால் ஆன பொருள் அல்லது செண்பக மலர், சுக்கு வாங்கி வைக்க வேண்டும்.
சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை; சுப்ரமணியனை மிஞ்சிய தெய்வமும் இல்லை என்பார்கள்.
சுக்கு அவ்வளவு மகத்துவம் வாய்ந்த பொருளாகும்.
வாங்க வேண்டிய 5 பொருட்கள்

அதே போல் முருகப் பெருமானுக்குரிய நிறமான சிவப்பு நிறத்தால் ஆன துணி ஒன்றை வாங்கி வைக்கலாம் அல்லது சிவப்பு நிற வஸ்திரம் வாங்கி முருகனுக்கு அணிவிக்கலாம்.
அதனோடு சுத்தமான சந்தனம் வாங்கி வைக்க வேண்டும்.
இந்த சந்தனத்தை விக்ரகம் இருந்தால் முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்வதற்கும், படமாக இருந்தால் முருகப் பெருமானின் படத்திற்கு பொட்டு வைத்து அலங்காரம் செய்வதற்கு பயன்படுத்தலாம்.
இந்த 5 பொருட்களை மாதந்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திர நாளில் முருகப் பெருமானின் படத்திற்கு முன்பு வாங்கி வைத்து வழிபட்டால் கடன் விரைவில் அடைபடும்.
அத்தோடு பணவரவும் அதிகரிக்க துவங்கும்.
சொல்ல வேண்டிய மந்திரம்

கிருத்திகை அன்று விரதம் இருந்து இந்த வழிபாட்டினை செய்வது சிறப்பானது.
விரதம் இருக்க முடியாதவர்கள் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து எளிமையான உணவுகளை எடுத்துக் கொண்டு இந்த வழிபாட்டினை செய்யலாம்.
முருகனை வழிபடும் போதும் கீழே உள்ள மந்திரத்தை சொல்லி வழிபட வேண்டும்.
எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை இந்த மந்திரத்தை சொல்லி வழிபடுவது சிறப்பானதாகும்.
இதனால் நீண்ட நாள் தொல்லை கொடுத்த நோய்களும் கூட தீரும்.
“ஓம் தத் புருசாய வித்மஹே
மகேஷ்வர புத்ராய தீமஹி
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்....”