சட்டவிரோதமாக தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட அறுவர் அதிரடி கைது!
பதுளை - லுனுகல, புலுகொல்ல பகுதியில் தொல்பொருட்களைத் தேடும் நோக்கில் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொண்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லுனுகல காவல் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் புலுகொல்ல பகுதியில் உள்ள கும்புகன் ஓயா வனப்பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
மேலும், சந்தேக நபர்களின் பல அகழ்வாராய்ச்சி உபகரணங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் லுனுகல, எம்பிலிப்பிட்டிய, பிலியந்தலை, தனமல்வில, மில்லபெத்த மற்றும் ஹொப்டன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் 49 முதல் 61 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து லுனுகல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
போர்க்காலத்தின் தகவல் பரிமாற்ற ஊடகமாக விளங்கிய வானொலி 5 மணி நேரம் முன்