வெலிகம பிரதேச சபையை கைப்பற்றிய சஜித் தரப்பு
வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் லசந்த விக்ரமசேகர பெரும்பான்மை வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தவிசாளர் தெரிவுக்காக இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளருக்கு 23 உறுப்பினர்கள் வாக்களித்ததோடு, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளருக்க 22 பேர் ஆதரவு வழங்கியிருந்தனர்.
வெலிகம பிரதேச சபை தவிசாளரை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று (24) இரண்டாவது முறையாக நடைபெறவுள்ள நிலையில்,வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் லசந்த விக்ரமசேகர தெரிவுசெய்யப்பட்டார்.
வெலிகம பிரதேச சபை
இதேவேளை, வெலிகம பிரதேச சபைக்கு அருகில் இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரதேச சபைக்கான தவிசாளர் தேர்தல் கடந்த மாதம் 27 ஆம் திகதி நடைபெற்றது.
இதன்போது, தேசிய மக்கள் சக்தியின் இரண்டு உறுப்பினர்கள் கடத்தப்பட்டதாகக் கூறி, வெலிகம பிரதேச சபை வளாகத்திற்குள் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டதால், தென் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி எரந்தி டி உமங்கா மெண்டிஸ், தவிசாளர் தேர்தலை இன்று வரை ஒத்திவைக்க முடிவு செய்தார்.
வெலிகம பிரதேச சபைக்கு அருகில் பாதுகாப்புக்காக காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது நிலைமை அமைதியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
