சிறுவர்கள் தொடர்பில் பரப்பப்படும் பொய்யான தகவல்கள்
Sri Lanka
Hospitals in Sri Lanka
National Health Service
By Sumithiran
தற்போது சிறுவர்களிடையே விசேட தோல் நோய் பரவுவதாக சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (13) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரியவந்துள்ளது.
எனவே, சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற பொய்யான செய்திகள் பரப்பப்படுவது குறித்து அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலந்து கொண்ட தோல் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பொய்யான பிரசாரங்களால்
மேலும் மருத்துவ நிலைமைகள் தொடர்பில் பொய்யான பிரசாரங்களால் மக்கள் மிகவும் அமைதியின்மைக்கு உள்ளாகி வருவதாகவும், மேலும் அமைதியற்ற நிலைமைகள் காரணமாக சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாகவும் வைத்திய நிபுணர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மரண அறிவித்தல்