கொழும்பில் 50 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத கைத்தொலைபேசிகள் காவல்துறையால் பறிமுதல்!
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Smart Phones
By Pavi
கொழும்பு கொல்லுபிட்டி லிபர்டி பிளாஸாவில் 5 கோடிக்கம் அதிகமான பெறுமதியுள்ள சட்டவிரோத கையடக்க தொலைபேசிகள் காவல்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றபட்ட கையடக்க தொலைபேசிகளில் புதிய ஐபோன் (iPhone) மொடல்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட சட்டவிரோதமான தொலைபேசிகள் இருந்ததாக வலானா காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் வலனா ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
300-க்கும் மேற்பட்ட நவீன கைபேசிகள்
மேலும் இந்த விசாரணையில் கைபேசிகளை வைத்திருந்த நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

சந்தேகத்திற்கிடமாக கைப்பற்றப்பட்ட கைப்பேசிகளின் மதிப்பு 5 கோடி ரூபாய்க்கும் மேல் எனக் கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கை, காவல் உதவி கண்காணிப்பாளர் ரோகன் ஒலுகலாவின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 1 மணி நேரம் முன்
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
4 நாட்கள் முன்
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்