தமிழர்களுக்குத் தீர்வு கிடைக்குமா? குருந்தூர்மலையில் வைத்து சுமந்திரன் கூறிய பதில் (காணொளி)
உள்நாட்டு பொறிமுறையில் ஒரு தீர்வும் கிடைக்காது என காலாகாலமாக நாம் கூறிவருகிறோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சுதந்திர தினமான இன்று எமது மத உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தொடரும் நில ஆக்கிரமிப்பு தொடர்பாகவும் எதிர்ப்பை காண்பிக்கும் வகையில் முல்லைத்தீவு - குருந்தூர்மலைக்கான கவனயீர்ப்பு விஜயம் ஒன்று மேற்கொள்ளவுள்ளதாகவும் இதில் பங்கேற்குமாறும் நேற்றையதினம் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இராசமாணிக்கம் சாணக்கியன், சிவஞானம் சிறீதரன் தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட அரசியல்வாதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் என சுமார் 75 பேர் வரையில் கலந்துகொண்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.





