மர்ம நபர்களின் கோரத் தாக்குதல்! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலி - தென்னாபிரிக்காவில் சம்பவம்
தென்னாபிரிக்காவின் நட்டால் மாகாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், “இந்த துப்பாக்கிச் சூடு இன்று அதிகாலையில் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். உயிரிழந்தவர்களில் 7 பேர் பெண்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
உலகில் அதிக அளவிலான மக்கள் பயங்கரமாக கொல்லப்படும் நாடுகளின் ஒன்று தென்னாபிரிக்கா.
துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்
அண்மைக் காலத்தில் தென்னாபிரிக்காவில் அடையாளம் தெரியாத நபர்களால் நிகழ்த்தப்படும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
கடந்த ஜனவரி மாதம் தென்னாபிரிக்காவின் தென் கடலோர நகரம் ஒன்றில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர்.
அதேபோல கடந்த ஆண்டு மதுபான விற்பனைக்கூடம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
