அமெரிக்காவின் வழிக்கு வந்த ஸ்பெயின்! ஈரான் போரில் புதிய திருப்பம்
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவை ஆதரிக்க ஸ்பெயின் முடிவு செய்துள்ளதாக அமெரிக்க பத்திரிகை செயலாளர் அறிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
முடிவுக்கான காரணம்
நேற்று (04) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தேவையான உதவிகளை வழங்காததற்காக ஸ்பெயினை கடுமையாக விமர்சித்ததொடர்ந்து மேற்படி முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஸ்பெயின் பிரதமர் நேற்று (04) ஊடகங்களுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டு, தான் போருக்கு எதிரானவர் என்று அறிவித்துள்ளார்.
சர்வதேச சட்டத்தின் வீழ்ச்சி
இது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும், உக்ரைன் மற்றும் காசா போர்களில் செய்தது போல் இந்த சந்தர்ப்பத்திலும் செயல்படுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

மக்களைப் பாதுகாக்கும் சர்வதேச சட்டத்தின் வீழ்ச்சியை தான் நிராகரிப்பதாக பிரதமர் பெட்ரோ சான்செஸ் தெரிவித்துள்ளார்.
2003 இல் தனது ஆட்சியாளர்கள் செய்த தவறுகளை தனது நாடு மீண்டும் செய்யாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |