ஈரானுக்கு சிறிதும் அஞ்சாமல் இஸ்ரேல் செய்யும் காரியம்! பணயம் வைக்கப்படும் உயிர்கள்
இஸ்ரேல் தனது முக்கிய சர்வதேச நுழைவாயிலான பென் குரியன் விமான நிலையத்தை வியாழக்கிழமை முதல் படிப்படியாக மீண்டும் திறக்கத் தொடங்க உள்ளதாக விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் இஸ்ரேலியர்கள் நாட்டிற்குத் திரும்ப முடியும் என்று கூறப்படுகிறது.
ஏதென்ஸிலிருந்து வரும் முதல் விமானமான எல் அல் விமானம் வியாழக்கிழமை அதிகாலை இஸ்ரேலை வந்தடையும் என தெரிவிக்கப்படுகிறது.
ஈரான் மீதான தாக்குதல்
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியதைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை முதல் இஸ்ரேல் தனது வான்வெளியை மூடியது.

இந்த நிலையில், விமான நிலையத்தை படிப்படியாக மீண்டும் திறப்பது, ஈரானிடமிருந்து இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் குறைந்து வருவதைக் குறிப்பதாக சர்வதேச வட்டாரங்கள் கூறுகின்றன.
மிகுந்த எச்சரிக்கை
எவ்வாறாயினும், குறித்த நடவடிக்கை மிகுந்த எச்சரிக்கையுடன் முன்னெடுக்கப்படும் என இஸ்ரேல் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையம் திறக்கப்பட்ட முதல் 24 மணி நேரத்தில், இஸ்ரேல் விமான நிலைய ஆணையம் ஒரு மணி நேரத்திற்கு ஒரு விமானத்தை மட்டுமே அனுமதிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, திறப்பு சீராக நடந்தால், அதிக விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்படும் என்று மேலும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |