அமெரிக்காவின் பொய்யான அறிக்கை! ஸ்பெயின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
புதிய இணைப்பு
மத்திய கிழக்குப் போர் குறித்த தனது நாட்டின் நிலைப்பாடு மாறவில்லை என்று ஸ்பெயினின் வெளியுறவு அமைச்சர் ஜோஸ் மானுவல் ஆல்பிரெஸ் அறிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்க இராணுவத்துடன் ஒத்துழைக்க ஸ்பெயின் ஒப்புக்கொண்டதாக வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லெவிட்டின் அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
சம்பந்தப்பட்ட அறிக்கையை தாம் கடுமையாக நிராகரிப்பதாகவும், போர் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு மாறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
முதலாம் இணைப்பு
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவை ஆதரிக்க ஸ்பெயின் முடிவு செய்துள்ளதாக அமெரிக்க பத்திரிகை செயலாளர் அறிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
முடிவுக்கான காரணம்
நேற்று (04) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தேவையான உதவிகளை வழங்காததற்காக ஸ்பெயினை கடுமையாக விமர்சித்ததொடர்ந்து மேற்படி முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஸ்பெயின் பிரதமர் நேற்று (04) ஊடகங்களுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டு, தான் போருக்கு எதிரானவர் என்று அறிவித்துள்ளார்.
சர்வதேச சட்டத்தின் வீழ்ச்சி
இது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும், உக்ரைன் மற்றும் காசா போர்களில் செய்தது போல் இந்த சந்தர்ப்பத்திலும் செயல்படுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

மக்களைப் பாதுகாக்கும் சர்வதேச சட்டத்தின் வீழ்ச்சியை தான் நிராகரிப்பதாக பிரதமர் பெட்ரோ சான்செஸ் தெரிவித்துள்ளார்.
2003 இல் தனது ஆட்சியாளர்கள் செய்த தவறுகளை தனது நாடு மீண்டும் செய்யாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |