பற்றி எரியும் இஸ்ரேல் : இலங்கையர்களுக்கு வெளியான அவசர அறிவிப்பு
ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் நிலவி வருவதால் இலங்கையர்களுக்கு இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக, விமானப் பயணம் தடைசெய்யப்பட்டுள்ளதனால் இஸ்ரேலுக்கு வரும் மற்றும் புறப்படும் இலங்கையர்கள் மறு அறிவிப்பு வரும் வரை தங்கள் விமானப் பயணங்களை தாமதப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றது.
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், தாக்குதல் நடத்தும் தரப்பினரிடமிருந்து ஏவப்படக்கூடிய ஏவுகணைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பாதுகாப்பாக வீடுகளில் இருக்கவும் தூதரகம் அறிவுறுத்துகிறது.
அவசர உதவி
இஸ்ரேலும் அனைவரையும் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளதுடன், போக்குவரத்தையும் நிறுத்தியுள்ளது.
இலங்கையர்கள் எப்போதும் குடிநீரையும் உலர் உணவையும் தங்களிடம் வைத்திருக்குமாறும், தூதரக அதிகாரிகளை 24 மணி நேரமும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இலங்கையர்களுக்கு அவசர உதவிகளை வழங்க பின்வரும் தொலைபேசி இலக்கங்களை வழங்கியுள்ளது.
📌 இலங்கை தூதரகம் - இஸ்ரேல்
▪️ +94 71 844 7305 - துணைத் தூதரகத் தலைவர்
▪️ +94 71 683 3513 - ஆலோசகர் (தொழிலாளர் நலன்)
▪️ +94 71 974 2095 - இரண்டாம் செயலாளர் (தொழிலாளர் நலன்)
(வாட்ஸ்அப் - அவசரநிலைகள் மட்டும்)
📌இலங்கை தூதரகம் - தெஹ்ரான்
▪ கே.ஜி.யு. லக்மல், பொறுப்பாளர் அ.ஐ. - +98 939 205 5161
(வாட்ஸ்அப் - அவசரநிலைகள் மட்டும்)
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
