யாழ் நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீன்பிடிப் படகு விபத்து: விசேட தேடுதலில் இலங்கை கடற்படை
யாழ் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் இந்திய மீன்பிடிப் படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் நேற்று (05-08-2026) இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோதமாக நுழைந்து கடற்படி நடவடிக்கையில் ஈடுபட்ட மீன்பிடிப் படகே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விசேட தேடுதல்
விபத்தையடுத்து இலங்கை கடற்படை விசேட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
இது குறித்து கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் சாமிந்த வலக்குளுகே ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 11 பேரைக் கொண்ட இந்திய மீன்பிடிப் படகொன்று நேற்று இரவு (05-08-2026) விபத்துக்குள்ளானது என உறுதிப்படுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மீன்பிடிப் படகில் இருந்தவர்களை மீட்கும் பொருட்டு இலங்கை கடற்படையின் மீட்புக் குழுவினர் தற்போது அப்பகுதியில் தீவிர மீட்புப் பணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |