பாடசாலை வளாகங்களுக்குள் அச்சுறுத்தலான மரங்களை அகற்ற பணிப்பு
பாடசாலை வளாகத்திற்குள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மரங்கள் இருந்தால், அந்தந்த பிரதேச செயலாளர்கள் அல்லது வன வள பாதுகாப்புத் துறைக்கு உடனடியாகத் தெரிவிக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு பிரதிக் கல்வி அமைச்சர் மதுர செனவிரத்ன அறிவுறுத்தியுள்ளார்.
பலாங்கொடை, (Balangoda) ரஜவக்க மகா வித்தியாலயத்தில் மரக்கிளை ஒன்று விழுந்ததால் ஏற்பட்ட சேதத்தை ஆய்வுசெய்ய சென்றபோது, பிரதி அமைச்சர் இந்தக் கருத்துக்களை இதனைத் தெரிவித்தார்.
மாணவர்களின் பாதுகாப்பு
மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக ஆபத்தான மரங்கள் குறித்து பாடசாலை அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் விரைவான மற்றும் பொறுப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ரஜவக்க வித்தியாலயத்தில் நடந்த சம்பவத்தில் 17 வயது மாணவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தான், அதே நேரத்தில் மரத்தின் ஒரு பகுதி பள்ளி கட்டிடத்தின் மீது சரிந்து விழுந்ததில் 17 பேர் காயமடைந்தனர்.
பலாங்கொடை வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை சந்தித்து அவர்களின் நிலை குறித்து விசாரித்ததாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மாணவரின் இறுதிச் சடங்கிலும் அவர் கலந்து கொண்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
