மத்திய கிழக்கில் இருந்து இலங்கை திரும்பியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக இஸ்ரேலில் பணிபுரியும் மற்றும் நாட்டிற்குத் திரும்ப விரும்புவோருக்கு முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சினால் இந்த சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, மறு நுழைவு விசாவுடன் நாட்டிற்கு வந்தவர்களின் விசாக்களின் செல்லுபடி காலத்தை வரும் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்க நாட்டின் மக்கள் தொகை மற்றும் குடிவரவு ஆணைக்கழு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய நிறுவனங்களுக்கும் அறிவிப்பு
இஸ்ரேலுக்கான சர்வதேச விமானங்கள் இப்போது மீண்டும் தொடங்கியுள்ளதால், மறு நுழைவு விசாவில் நாட்டிற்கு வந்தவர்கள் மறு நுழைவு விசா காலம் காலாவதியானாலும், அடுத்த மாதம் 31 ஆம் திகதி வரை இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காகத் திரும்பலாம் என்று அமைச்சசு தெரிவித்துள்ளது.
மேலும், இது குறித்து அனைத்து தொடர்புடைய நிறுவனங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் கூறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
