கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய உளவாளி
இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் ரொஷான் குமார சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உட்பட பல கொலைகள் தொடர்பாக காவல்துறை விசாரணைகளுக்காக தேடப்பட்டு வந்த எல்பிட்டிய பிரதேசவாசி ஒருவர் டுபாய் செல்வதற்காக வேறு பெயரில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி ஆவணம் மூலம் பெயர் மாற்றி போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி டுபாய்க்கு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த போது தானியங்கி முக அடையாள அமைப்பு(( Facial Recognition System ) )மூலம் அடையாளம் காணப்பட்ட சந்தேக நபரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
போலிப் பெயரில் போலி கடவுச்சீட்டை
இவர் எல்பிட்டிய கரந்தெனிய பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடையவர். நாட்டிலிருந்து தப்பிச் செல்வதற்காக மதுரடுவ டில்ஷான் மதுசங்க டி சில்வா என்ற போலிப் பெயரில் போலி கடவுச்சீட்டை தயார் செய்துள்ளார்.
அவர் ஒருமுறை சிறிலங்கா இராணுவத்தின் கொமாண்டோ படைப்பிரிவில் பணியாற்றி விட்டு வெளியேறியுள்ளார்.
உளவு பார்த்ததாக
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளரைச் சுட்டுக் கொல்ல உளவு பார்த்ததாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை !](https://cdn.ibcstack.com/article/4a541f45-4b6b-46cc-8bfc-da43b80fd749/24-6682dbaba3ee0-md.webp)
இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை ! 2 நாட்கள் முன்
![அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…](https://cdn.ibcstack.com/article/8170aadf-e519-44c1-8849-b5aa88b7da2a/24-66736d16968e6-sm.webp)