திடீர் குண்டு வெடிப்பு: விமானப்படை வீரர் ஒருவர் பலி
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Air Force
By Dilakshan
கல்பிட்டி கந்தகுளிய விமானப்படை பயிற்சி நிலையத்தில் திடீர் குண்டு வெடிப்பினால் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று(26) இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் பயிற்சியின் போது ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இதில் 28 வயதுடைய விமானப்படை வீரர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கல்பிட்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
மரண அறிவித்தல்