எதிர்காலத்தில் அரசாங்கம் நீதியைப் பெற்றுக்கொடுக்கும் - நம்பிக்கை வெளியிட்ட போராட்டக்காரர்கள்
அரசாங்கம் எதிர்காலத்தில் போராட்டக்காரர்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்கும் என எதிர்பார்ப்பதாக காலி முகத்திடல் போராட்டக்கார்கள் தெரிவித்துள்ளனர்.
அதிபரின் வீடு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அங்கு வருகை தந்த போராட்டக்கார்கள் இதனைக் கூறியுள்ளனர்.
அதேநேரம், அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டதாக சட்டத்தரணி முதித்த திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார்.
விளக்கமறியல் நீடிப்பு
அதிபரின் வீடு கடந்த ஜீலை மாதம் 9 ஆம் திகதி இரவு போராட்டக்காரர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டது.
இது தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை 1 தொடக்கம் 9 வரை வரிசைப்படுத்தி, அதில் நான்கிற்கு உட்பட்டவர்களை விளக்கமறியலில் வைக்கவும் நான்கிற்கு மேற்பட்டோரின் விரல் ரேகைகளை பரீட்சிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கு இந்த மாதம் 24 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.