தவறாக மக்களை வழிநடத்தும் அநுர- சட்ட நடவடிக்கைக்குத் தயாராகும் மகிந்தவின் புதல்வர்!
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்சவின் புதல்வரும் அவரது ஊழியர்கள் குழுவின் தலைமை அதிகாரியுமான யோஷித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அநுரகுமார திஸாநாயக்க நேற்று கொழும்பில் தன்னை குறித்து சுமத்திய குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பதுடன் மக்களை தவறாக வழிநடத்தும் செயல் என யோஷித ராஜபக்ச வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
இதன் மூலம் தனக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயருக்காக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்டத்தரணிகளுக்கு ஆலோசனை வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள தகவல்களை அருவருப்புடன் கண்டிப்பதாகவும் கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று அரசியல்வாதிகள், அவர்களை சார்ந்தவர்கள் மற்றும் அதிகாரிகளின் ஊழல் மோசடிகள் தொடர்பான கோப்புகளை அம்பலப்படுத்திய அனுரகுமார திஸாநாயக்க, யோஷித்த ராஜபக்சவுக்கு சொந்தமாக பல இடங்களில் பல கோடி ரூபாய் பெறுமதியான காணிகள் மற்றும் சொத்துக்கள் இருப்பதாக கூறியிருந்தார்.
அதற்கான ஆதாரங்களையும் அவர் சமர்ப்பித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.