ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்கு கிழக்குப் பல்கலையில் நினைவஞ்சலி!
கிழக்குப் பல்கலைக்கழகம் - வந்தாறுமூலை மாணவர்கள், உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்கு நினைவஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடைபெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று காலை 10.30 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தின் முன் இடம்பெற்றது.
கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இவ்வஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. குண்டுத் தாக்குதலில் பலியான உறவுகளை நினைவு கூர்ந்து 2 நிமிட மௌன இறைவணக்கத்துடன் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு தீபங்களும் ஏற்றப்பட்டு நினைவு கூரப்பட்டது.
இதேவேளை கருத்து தெரிவித்த மாணவர்கள் இவர்களுக்கான குண்டுத்தாக்குதலில் பலியானவர்களுக்கான நியாயம் கிடைக்கப்பெற வேண்டும், அவர்களின் இழப்புக்கான காரணங்களோ தீர்வுகளோ இன்று வரை எமக்கு கிடைக்கப்பெறவில்லை, இப்படியான கொடூரமான செயல் இனியும் இடம்பெறக் கூடாது எனவும் தெரிவித்த மாணவர்கள் இவர்களது ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்தித்தனர்.