பதவி விலகலை அறிவித்த பொதுஜன பெரமுனவின் இராஜாங்க அமைச்சர்!
இராஜாங்க அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ராகமவில் மருத்துவ பீட மாணவர்களைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் அவரது மகன் காவல்துறையில் சரணடைந்துள்ள பின்னணியில் பதவி விலக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ராகமவில் அமைந்துள்ள களனி பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் மீது குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு செய்ப்பட்டது.
இது தொடர்பில் காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணையின் போது, தாக்குதல் சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டேவின் மகன் ராகம காவல் நிலையத்தில் சரணடைந்திருந்தார்.
இதேவேளை ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தில் தான் ஈடுபட்டது உறுதியானால் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவை இராஜினாமா செய்யுமாறு கோட்டாபய ராஜபக்வும், நேற்று பணிப்புரை விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே இன்றைய தினம் அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.