சிலுவைப் போராட்டக் களத்தில் மஹிந்த தேசப்பிரிய!
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு நீதி கோரி கடந்த 19 ஆம் திகதி இளம் நடிகர் ஒருவர் நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் இருந்து காலி போராட்டக் களம் நோக்கி சிலுவையை சுமந்தவாறு நடைபயணம் ஒன்றை ஆரம்பித்திருந்தார்.
கட்டுவாப்பிட்டியில் இருந்து ஆரம்பித்த நடைபயணம் நேற்றைய தினம் காலி போராட்ட களத்திற்கு சென்றடைந்தது.
சுமார் 40 கிலோமீற்றர் தூரத்திற்கு பெரிய சிலுவையை சுமந்த வண்ணம் ஆரம்பித்திருந்த இந்த பயணத்தில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரியவும் கலந்துகொண்டிருந்தார்.
ஜெஹான் அப்புஹாமி என்ற நடிகரே இவ்வாறு சிலுவையை சுமந்தவாறு போராட்டத்தை ஆரம்பித்தார். இவர் கொழும்பு வீதியால் பயணம் செய்து கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தை சென்றடைந்து அங்கிருந்து அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் இடம்பெறும் காலிமுகத்திடலுக்கு சென்றடைந்துள்ளார்.