எதிர்வரும் 02 வாரங்கள் இலங்கைக்கு மிகவும் முக்கியமானவை! பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை
நிச்சயமற்ற அரசியல் சூழல், சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகள், வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு மற்றும் எரிபொருள் நெருக்கடி போன்ற காரணங்களால் இலங்கை ஒரு நெருக்கடியான சூழலை எதிர்கொண்டுள்ளது.
இதன் காரணமாக எதிர்வரும் 02 வாரங்கள் இலங்கைக்கு மிகவும் முக்கியமானவை என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, இலங்கையின் திவால் நிலைக்கான காரணங்களில் சீனாவின் ஆதாயமற்ற திட்டங்களும், கடன் ஒப்பந்தங்களும் இருப்பதாக அமெரிக்கா எச்சரித்து வருகிறது.
சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தை இன்னும் சரியான உடன்பாடு இல்லாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது, மேலும் வட்டி விகிதங்கள் அதிகரித்து வரும் நிலையில், சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை நடத்துவது சவாலான சூழ்நிலையாக மாறியுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,