தேர்தல் நிதி தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட மற்றுமொரு இடைக்கால உத்தரவு

Ranil Wickremesinghe Sri Lanka Magistrate Court Sri Lankan local elections 2023
By Dharu Mar 03, 2023 04:47 PM GMT
Report

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை தடுத்து நிறுத்துவதை நிராகரிக்கும் வகையில் உயர் நீதிமன்றம் மற்றுமொரு இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

சட்டமா அதிபர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் இன்று (03) இந்த இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்தது.

உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் திணைக்களம் மற்றும் நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பிரதிவாதிகள் நிதியை விடுவிக்காமல் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக கோரி ஐக்கிய மக்கள் சக்தி பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.

மனு மீதான பரிசீலனை

தேர்தல் நிதி தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட மற்றுமொரு இடைக்கால உத்தரவு | Sri Lanka Election Interim Injunction High Court

இந்த மனு, பிரீதி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மனு மீதான பரிசீலனையின் போது, மனுதாரர் ரஞ்சித் மத்துமபண்டார சார்பில் முன்னிலையான அதிபர் சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, அரசியலமைப்பின் பிரகாரம் நிதியமைச்சு, அரசாங்க அச்சகம், காவல்துறைமா மா அதிபர் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு உதவ வேண்டும் என குறிப்பிடார்.

தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஒன்றிணைந்த நிதியின் கீழ் வழங்குவதற்கு அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாகவும், அரசாங்க அதிகாரிகள் அதனை மறுக்கும் நிலையில் இல்லை எனவும் அதிபர் சட்டத்தரணி தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

''நாட்டின் மோசமான பொருளாதார நிலை காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு நிதி வழங்க முடியாது என நிதி அமைச்சின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

டொலர் நெருக்கடி

தேர்தல் நிதி தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட மற்றுமொரு இடைக்கால உத்தரவு | Sri Lanka Election Interim Injunction High Court

2023 ஆம் ஆண்டு தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன்றம் 10 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ள நிலையில் நிதி அமைச்சின் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலை நடத்துவது டொலர் நெருக்கடியுடன் தொடர்புடைய விடயம் அல்ல. தேவையான நிதி வழங்கப்படாததாலும், வாக்குச் சீட்டு அச்சடிக்கப்படாததாலும் உள்ளாட்சித் தேர்தல் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இது அதிபர் மற்றும் பொதுத் தேர்தல்களை நடத்துவதை ஒத்திவைப்பதற்கான ஒரு பரிசோதனையாக இருக்கலாம்" என தெரிவித்தார்.

இந்த நிலையில் ஜனநாயகத்தையோ அடிப்படை உரிமைகளையோ மீறும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என சட்டமா அதிபர் தரப்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நாவன தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

''நிதியமைச்சின் செயலாளர் வேண்டுமென்றே தேர்தலுக்கு பணம் வெளியிடுவதில்லை என்று மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிராகரிக்கிறேன்.

மோசமான பொருளாதார நிலை

தேர்தல் நிதி தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட மற்றுமொரு இடைக்கால உத்தரவு | Sri Lanka Election Interim Injunction High Court

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் கலந்துகொண்டார். தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு 100 மில்லியன் ரூபாவும், அரசாங்க அச்சகத்திற்கு 40 மில்லியன் ரூபாவும், சிறிலங்கா காவல்துறைக்கு 25 மில்லியன் ரூபாவும் விடுவிக்க நடவடிக்கை எடுத்தார்.

அப்படியானால் அவர் தேர்தல் பணியில் தலையிடவில்லை என எப்படி குற்றம் சாட்ட முடியும்? நாட்டின் மோசமான பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு பொதுச் செலவினங்களை மட்டுப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே பணம் ஒதுக்க அரசு முடிவு செய்துள்ளது. தேர்தல் நடத்த தேவையில்லை என்று நான் கூறவில்லை. நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச அமைப்புகளின் ஆதரவை அரசாங்கம் கோரியுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு இந்த நிலைமையை நிதித்துறை செயலாளர் தேர்தல் ஆணையத்திடம் விளக்கினார். அப்போது தேர்தல் ஆணையம் வாக்கெடுப்பு நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து முடிவெடுக்க இடம் இருந்தது.

உள்ளாட்சி தேர்தல்

தேர்தல் நிதி தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட மற்றுமொரு இடைக்கால உத்தரவு | Sri Lanka Election Interim Injunction High Court

இந்த மனுவில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், தேர்தல்கள் ஆணைக்குழு பிரதிவாதியாக குறிப்பிடப்படாததால், இந்த மனுவை பராமரிக்க முடியாது.'' என நீதிமன்றில் வலியுறுத்தினார்.

அதன் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் சார்பில் முன்னிலையான அதிபர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவிக்கையில்,

"உள்ளாட்சி தேர்தலை மார்ச் 09 ஆம் திகதி நடத்த தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் ஒருமனதாக முடிவு செய்தனர். பல அரசாங்க நிறுவனங்கள் தேர்தலுக்கு இடையூறு விளைவித்தன, மேலும் உள்ளூராட்சி தேர்தல் அத்தியாவசிய நடவடிக்கையாக நியமிக்கப்படாததால், நிதியை விடுவிக்க முடியாது என்று நிதி அமைச்சின் செயலாளர் கூறினார்.

தேர்தல் நடத்த வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்யும் நிலையில் நிதி அமைச்சர் இல்லை. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தேர்தல்கள் ஆணைக்குழு 08 பில்லியன் ரூபாவைக் கோரியது.

இடைக்கால உத்தரவு

தேர்தல் நிதி தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட மற்றுமொரு இடைக்கால உத்தரவு | Sri Lanka Election Interim Injunction High Court

தேர்தல் கடமைக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருளின் பங்கை அதிகரிக்கக் கோரப்பட்டது, ஆனால் அதுவும் நிராகரிக்கப்பட்டது. கடந்த தேர்தலை விட 6 மடங்கு அதிக செலவுக்கான மதிப்பீட்டை காவல்துறை ஆணையர் சமர்ப்பித்துள்ளார்.

இது ஆபத்தான சூழ்நிலையாகும். என அவர் தெரிவித்தார்.

இந்த விடயங்களை கருத்திற்கொண்ட உயர் நீதிமன்றம், 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை தடுத்து நிறுத்துவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவு இன்று சட்டமா அதிபர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளருக்கு இன்று பிறப்பித்துள்ளது.  

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ் நயினாதீவு 5ம் வட்டாரம், Jaffna, Markham, Canada

02 Sep, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Markham, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Bad Vilbel, Germany, London, United Kingdom

02 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, சிட்னி, Australia

02 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

06 Sep, 2010
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, நாவற்குழி, Markham, Canada

05 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
32ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

03 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், சரசாலை

07 Sep, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Pontault, France

06 Sep, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

புதுமாத்தளன், இறம்பைக்குளம்

03 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, பிரித்தானியா, United Kingdom

05 Sep, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, கச்சார்வெளி, புளியங்குளம், வவுனியா, Weston, Canada, Whitchurch, Canada

03 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024