காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி : இந்தியாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக இலங்கை அரசாங்கத்திடமிருந்து வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது நிறைவடைந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த ஆவணம் சட்டபூர்வ அனுமதிக்காக சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்படும் என்று துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக (Anura Karunathilaka) தெரிவித்துள்ளார்.
துறைமுகத்தின் அபிவிருத்திக்காக இந்திய அரசு 63.5 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்குவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.
சட்டமா அதிபரின் அனுமதி
இந்த திட்டம் இலங்கை துறைமுக அதிகார சபை (SLPA) மற்றும் இந்திய அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு முயற்சியாக நிர்வகிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்தவுடன், ஒப்பந்தத்தில் அதிகாரபூர்வமாக கையெழுத்திட இந்திய அதிகாரிகளுடன் இறுதி விவாதங்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
நிதி மானியம் மற்றும் அடுத்தடுத்த கட்டுமான கட்டங்கள் இரண்டையும் உள்ளடக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டவுடன் திட்டம் தொடங்கும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |