தடம்புரண்ட எரிபொருள் தாங்கி - பெருமளவில் விரயமாகும் எரிபொருள்!
பதுளை – கொழும்பு பிரதான வீதியின் பங்கெட்டிய பிரதேசத்தில் எரிபொருள் தாங்கி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வேகக் கட்டுப்பாட்டை இழந்து தாங்கி கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த தாங்கியிலிருந்து எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் விபத்து காரணமாக பெருமளவான எரிபொருள் வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை எரிபொருள் முனையத்தில் இருந்து ஹப்புத்தளை நோக்கி பயணித்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான குறித்த எரிபொருள் தாங்கியில் 33,000 லீற்றர் டீசல் இருந்ததாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
மேலும் விபத்தில் காயமடைந்த தாங்கி சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.