சபை அமர்வில் அரசாங்கத்திற்கெதிராக பதாதைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பி எதிர்ப்பு!
ராஜபக்ஷ அரசாங்கத்திற்கெதிராகவும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும் புத்தளம் கொழும்பு முகத்திடலில் அமைந்துள்ள கோட்டா கோ கமவிலிருந்து மாட்டு வண்டிகளிலும் துவிச்சக்கர வண்டிகளிலும் ஐக்கிய மக்கள் சக்தி, மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நகரசபை உறுப்பினர்கள் சபை அமர்விற்கு சென்றுள்ளனர்.
இன்றைய சபை அமர்விற்கே அவர்கள் இவ்வாறு சென்றுள்ளனர்.
சபை அமர்வு ஆரம்பிப்பதற்கு முன்னர் அரசாங்கத்திற்கெதிராக பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் 7 நகரசபை உறுப்பினர்களும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 6 உறுப்பினர்களும், ஐக்கிய சுதந்திர கட்சியின் ஒரு உறுப்பினரும் சுயாதீன கட்சியின் ஒரு உறுப்பினரும் நல்லாட்சிக்கான தேசிய முன்னனி கட்சியின் உறுப்பினர் ஒருவரும் இதன்போது எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தார்.
இதன்போது ஐக்கிய பொதுஜன பெரமுன கட்சியின் நகரசபை உப தலைவரும் நகரசபை உறுப்பினர் ஒருவரும் சபை அமர்வில் கலந்து கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்