கதவுகள் திறந்தே உள்ளன வெளியேறிச் சென்று விமர்சியுங்கள்- மஹிந்தவின் தடாலடி அறிவிப்பு!
சிறிலங்கா அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதற்கு கதவுகள் திறந்தே இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
அரசாங்கத்திற்குள் இருந்துக்கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது மிகப் பெரிய அரசியல் தவறு என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதனால், அரசாங்கத்தில் இருந்து வெளியேறி அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு கதவுகள் திறந்தே இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது மேல் நோக்கி பார்த்து எச்சில் துப்புவதை போன்றது.
அதேபோல் ஊடகங்கள் மூலம் நடத்தப்படும் அரசியலுக்கு ஆயுள் குறைவு. நான் 50 வருடங்களாக அரசியலில் அனுபவங்களை பெற்றுள்ளேன்.
எனினும் எந்த சந்தர்ப்பத்திலும் அரசியல் கொள்கைகளில் இருந்து விலகிச் சென்றதில்லை எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.