வெளியில் தலைகாட்ட முடியாது தவிக்கும் பசில்- வைபவங்களில் பாடப்படும் “கப்புட்டு காக்கா... பசில்.. பசில்...”
நாடு முழுவதும் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக ராபக்ஷ குடும்பத்தை சேர்ந்த எவருமே பொது நிகழ்வுகள் மற்றும் வைபவங்களில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ திருமண வைபவங்கள் உட்பட வேறு எந்த நிகழ்வுகளுக்கும் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
நேற்று முன்தினம் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பசிலுக்கு எதிர்ப்பு வெளியிடும் இசை நிகழ்ச்சி ஒன்றும் நடத்தப்பட்டுள்ளது.
அதன் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அங்கு “கப்புட்டு காக்கா... பசில்.. பசில்...” என திருமணத்தில் கலந்து கொண்ட அனைவரும் பாடியுள்ளனர்.
ஆகவே மக்கள், எதிர்ப்பு வெளியிட கூடிய அனைத்து இடங்களிலும் எதிர்ப்பு வெளியிட ஆரம்பித்துள்ளனர்.
இதனால் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ திருமணம் நிகழ்வு மற்றும் முக்கிய இடங்களுக்கு செல்வதனை தவிர்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.