இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு- கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர்!
சூரியவெவ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கூரிய ஆயுத்தத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
செவனகல மற்றும் கதிர்காமம் பிரதேசத்தில் இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற தகராறு காரணமாக கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
செவனகல - சமாதிபுர பிரதேசத்திலேயே நேற்றிரவு நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், உயிரிழந்த நபர் சூரியவெவ - அலியொலுஆர பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் எனவும் விசாரணைகைளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் மேலும் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய சந்தேக நபர்களை தேடி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.