ஆற்றில் வீசப்பட்ட தலை - வெளியானது கொடூரக் கொலையின் பின்னணி!
மாத்தறை அக்குரெஸ்ஸ திப்பட்டுவாவ பிரதேசத்தில் வீடொன்றில் நேற்றைய தினம் பூசாரி ஒருவர், கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட நபரின் தலையை எடுத்துச் சென்று நில்வள கங்கை ஆற்றில் போட்டதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் கைது
24 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் ஆற்றில் போட்ட பூசாரியின் தலை மற்றும் கொலை செய்ய பயன்படுத்தி வாளை தேடிக் கண்டுப்பிடிக்க காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
கொலை சம்பவம் தொடர்பாக பிரதான சந்தேக நபரின் தாய் மற்றும் தந்தையையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் அக்குரெஸ்ஸ திப்பட்டுவாவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலைக்கான காரணம்
அதேவேளை சந்தேக நபர்கள் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளது என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனிடையே கொலை செய்த சந்தேக நபரின் தாக்குதலுக்கு உள்ளாகி, பூசாரியின் 60 வயதான மனைவி மற்றும் 40 வயதான மகளும் வெட்டுக்காயங்களுடன் அக்குரெஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் காவல்துறைியனர் தெரிவித்துள்ளனர்.
