அடுத்தவாரத்திலிருந்து அறிமுகமாகிறது எல்லையற்ற இணையசேவை? வெளியானது அறிவிப்பு
srilanka
people
nternet
By Vasanth
எல்லையற்ற இணைய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளதாக தொலைத்தொடர்புகள் மற்றும் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலங்கையில் அடுத்தவாரத்தில் இருந்து இந்த நடைமுறை அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்சமயம் பரீட்சார்த்த செயற்பாடுகள் இடம்பெற்று வருவதகவும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
எல்லையற்ற இணைய வசதிகளை வழங்குவது குறித்த தத்தமது திட்டங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கியிருப்பதாகவும் அவற்றை தற்போது பரிசீலனை செய்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் எந்த வகையிலான பக்கேஜ் (பொதிகள்) அறிமுகப்படுத்தப்படும் என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்