சிறிலங்கா நாடாளுமன்றிற்கு திடீர் விஜயம் செய்த சீனத் தூதுவர்!
சிறிலங்காவிற்கான சீனத் தூதுவர் ஷீ ஷென் ஹொங் (Qi Zhenhong ) திடீரென நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்து, ஆளும் கட்சியில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்கும் அணியினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பு நேற்று நடந்துள்ளதாக சிறிலங்காவிற்கான சீன தூதரகத்தின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை மற்றும் அது சம்பந்தமாக சீனா, சிறிலங்காவிற்கு உதவக் கூடிய விதம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
சீனத் தூதுவருடனான இந்த சந்திப்பில் ஆளும் கட்சியின் சுயாதீன அணியை சேர்ந்த ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
வாசுதேவ நாணயக்கார, அனுர பிரியதர்ஷன யாப்பா, தயாசிறி ஜயசேகர, ஜகத் புஷ்பகுமார, உதய கம்மன்பில, அத்துரலியே ரதன தேரர் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
On 22nd April, 🇨🇳Ambassador Qi Zhenhong met with 7 MPs of independent group in 🇱🇰parliament. They exchanged opinions on current situation in Sri Lanka, China's assistance to the island and other topics of mutual interest.
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) April 22, 2022
The MPs requested for China's continuous support to #lka pic.twitter.com/AK3de1hfxT