புதிய அதிபர் தேர்தலுக்கு சேலைன் போத்தலுடன் சென்ற உறுப்பினர்!
சிறிலங்காவின் புதிய அதிபர் தெரிவுக்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் இன்று நடைபெற்றது.
இந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்க, டலஸ் அழகப்பெரும மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் வேட்பாளர்களாக போட்டிட்டனர்.
தற்போது வாக்கெடுப்பு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வாக்களிப்பதற்காக இன்று நாடாளுமன்றுக்கு சென்றுள்ளார்.
நாடாளுமன்றிற்கு சேலைன் போத்தலுடன் வாக்களிப்பதற்காக சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் டீ.வீரசிங்கவுக்கும் சுகயீனம் காரணமாக முன்னுரிமை அடிப்படையில் வாக்கினை செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற செயலாளர் நாயகம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக அவருக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.