நாடாளுமன்றம் தரம் தாழ்ந்து போகவில்லை- விஜித ஹேரத்தின் கேள்வியால் ஆத்திரமடைந்த தினேஸ் குணவர்தன
நாடாளுமன்றத்தில் நேற்று மஹிந்த ராஜபக்ஷ இருந்த போது, பிரதமர் இராஜினாமா செய்துள்ளாரா என்பதை அறிந்துக்கொள்வது அவசியம் என எதிரணி நாடாளுமன்ற உறுப்பினா விஜித ஹேரத் கேள்வியெழுப்பியிருந்தார்.
அவ்வாறு நாடாளுமன்றில் நேற்றைய தினம் பிரதமரிடம் கேட்ட கேள்விகளுக்கு ஏன் பதிலளிக்க இடமளிக்கவில்லை என விஜித ஹேரத், சபாநாயகரிடம் இன்றைய தினம் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் பிரதமரிடம் கேள்வி ஒன்றை கேட்டிருந்ததாகவும் அதற்கு பதிலளிக்க பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த சபை முதல்வர் தினேஷ் குணவர்தன, இந்த கேள்விக்கு பதிலளிக்கும் அளவிற்கு நாடாளுமன்றம் தரம் தாழ்ந்து போக தேவையில்லை எனக் கூறினார்.
இதனையடுத்து சபை முதல்வருக்கும் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சூடான வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது சபையை அமைதிப்படுத்த சபாநாயகர் முயற்சித்தார். எனினும் வாக்குவாதம் தொடர்ந்தால், சபையை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.