நான் எந்தப் பக்கம் நிற்கின்றேன் என எனக்கே தெரியவில்லை- குழப்பத்தில் ரணில்!
நாடாளுமன்றமே தற்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் உயிரிழந்துள்ளார். எமது நாடாளுமன்ற கலாசாரத்தை மாற்ற வேண்டிய தருணம் வந்துள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
நான் இன்னும் பாலத்தின் நுழைவாயிலில் நிற்கிறேன், இப்போது நான் அதன் எந்தப் பக்கத்தில் நிற்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை.
எதிர்க்கட்சிகளின் கூட்டங்களில் என்னால் பங்கேற்க முடியாது ஆளும் கட்சியின் கூட்டங்களிலும் கலந்துகொள்ளவில்லை. ஆகவே இப்போது தான் எந்தப் பக்கத்தில் நிற்கிறேன் என்று தனக்குத் தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை எல்லோரும் ஒரே நேரம் எழுந்துநின்று பேசும் இந்த நாடாளுமன்றக் கலாசாரம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். இந்த கலாசாரத்துடன் நாம் முன்னேற முடியாது.
முதலில் இதை சரி செய்வோம். இதை மாற்ற வேண்டும் என இரு தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறேன். கலாசாரத்தை மாற்றுங்கள். ஏதேனும் கேள்விகள் இருந்தால் பேசலாம். கருத்துக்களை மாற்ற வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
கொள்கைகளை மாற்ற வேண்டாம். நீங்கள் பேச விரும்பும் நபருடன் எழுந்துநின்று பேசுங்கள். மற்றவர்கள் அமர்ந்திருக்கட்டும். புதிய நாடாளுமன்ற கலாசாரத்தை உருவாக்குவதற்காக நாடாளுமன்ற தேசிய சபையை நிறுவ வேண்டியது அவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இப்போது பல வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதாக கேள்விப்பட்டிருக்கின்றேன். இந்த நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். மக்கள் ஏன் இந்த நாடாளுமன்றத்தை குற்றம் சாட்டுகிறார்கள் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
அத்துடன் அன்று கோட்டாபய ராஜபக்சவை அரச தலைவராக்குவருவதற்கு எதிராக எமது நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம எம்முடன் இணைந்து செயற்பட்டார். ஆனால் இப்போது அவர் தாக்கப்பட்டுள்ளார் எனவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
