நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை -மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்
srilanka
people
By Vasanth
அடுத்த சில நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யாது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே இந்தக் காலப்பகுதியில் நிலவும் வெப்பமான காலநிலையின் தாக்கத்தை குறைக்க மக்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.
பணியிடத்தில் பணிபுரியும் மக்கள் முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுக்க வேண்டும், வயதானவர்களையும் நோயுற்றவர்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும்,
இந்த நாட்களில் அதிகப்படியான பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குழந்தைகளை வாகனங்களில் தனியாக விடக்கூடாது என்றும், வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணிய வேண்டும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்