தப்பி ஓடிய கோட்டாபய - பதுங்குகுழிக்குள் மகிந்த; அகதியாகச் செல்ல தயாராகும் பசில் - புபுது ஜாகொட

Parliament of Sri Lanka Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka SL Protest
By Kalaimathy Jul 16, 2022 07:53 AM GMT
Report

பொதுஜன பெரமுனவுக்கு தற்போது தலைமை இல்லை. கோட்டாபய ராஜபக்ச நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் மகிந்த ராஜபக்ச பதுங்குகுழிக்கு ஒளிந்துகொண்டிருக்கின்றார் என முன்னிலை சோசலிசக்கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார். 

இதேவேளை இலங்கையில் இருந்து எப்படி தப்பிக்க முடியும் என்று பசில் ராஜபக்ச விமான நிலையங்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றார். படகில் ஏறி அகதியாக இந்தியாவுக்கு செல்லவும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

ரணில் விக்ரமசிங்கவினால், பொதுஜன பெரமுனவுக்கு தலைமை தாங்க முடியும் என எவராவது நினைத்துக்கொண்டிருந்தால், அது பைத்தியகாரத்தனம். ஏனென்றால் பொதுஜன பெரமுனவின் வேலைத்திட்டங்கள் தற்போது முடிந்து விட்டது.

கோட்டாபயவை விட ரணிலின் நிலை மோசமாகும்

தப்பி ஓடிய கோட்டாபய - பதுங்குகுழிக்குள் மகிந்த; அகதியாகச் செல்ல தயாராகும் பசில் - புபுது ஜாகொட | Sri Lanka Podujana Peramuna Gotabaya Mahinda Ranil

கோட்டாபய ராஜபக்சவுக்கு நடந்ததை நாம் பார்த்தோம். இப்படியே சென்றால், இதனை விட மோசமான நிலைமை ரணில் விக்ரமசிங்கவுக்கு ஏற்படும். ரணிலால் நாடு சிவில் போரை நோக்கி தள்ளப்படும் ஆபத்து உள்ளது.

தனி நபரின் அதிகார ஆசைக்காக முழு நாட்டையும் அழிக்க இடமளிக்க முடியாது. பொது மக்களுக்கும், போராட்டகாரர்களுக்கும் இடையில் பிரிவினையை ஏற்படுத்துவது ரணிலின் திட்டம்.

பசில் ராஜபக்ச கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற போது குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் கடவுச்சீட்டில் முத்திரையிட மறுத்தனர். அவர்கள் போராட்டத்தில் இருந்தவர்கள் அல்ல, அதனை ஆசிர்வதித்தவர்கள்.

விமான சேவை நிறுவனங்கள் தமது விமானத்தில் பசில் ராஜபக்சவை ஏற்ற மறுத்தன. இந்த விமானப் பணிப்பெண்கள் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அல்ல. போராட்டத்திற்கு பொதுவாக மிகப் பெரிய ஆசிர்வாதம் இருந்தது.

மேலும் நாடாளுமன்றத்திற்கு அருகில் நடந்த சம்பவம் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து கட்சி என்ற வகையில் நாங்கள் விசாரணை நடத்துவோம். இரும்பு கம்பிகளால் இராணுவத்தினரை தாக்கும் தீர்மானம் எப்படி எடுக்கப்பட்டது.

போராட்டத்தின் போது துப்பாக்கிகளை பறித்தது யார்

தப்பி ஓடிய கோட்டாபய - பதுங்குகுழிக்குள் மகிந்த; அகதியாகச் செல்ல தயாராகும் பசில் - புபுது ஜாகொட | Sri Lanka Podujana Peramuna Gotabaya Mahinda Ranil

நாடாளுமன்றத்திற்கு அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தை தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்தது. அதற்கு வெளியில் இருந்து சம்பந்தப்பட்ட அமைப்பு எது. யார் துப்பாக்கிகளை பறித்தது.

பறித்த துப்பாக்கிகளுக்கு என்ன ஆனது. இதனை யார் செய்தார்கள் என்பதை நாங்கள் வெளியிடுவோம். அரசியல் ஆதரவுள்ள ஒரு நபருக்கு சொந்தமான பிரசார நிறுவனம் போராட்டகாரர்கள் இராணுவத்தை தாக்கினர் என்று தற்போது சமூக ஊடகங்களில் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளது.

இவற்றில் உள்ள தொடர்புகளை நாங்கள் விரைவில் அம்பலப்படுத்துவோம். இவை அனைத்தும் ரணில் விக்ரமசிங்கவின் விளையாட்டுக்கள். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கட்சி சார்பற்றவர்களுக்கும் அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களுக்கும் இடையில் மோதலை ஏற்படுத்துவது அவரது திட்டம்.

காவல்துறையினருக்கும் போராட்டகாரர்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தும் திட்டம். மக்கள் விடுதலை முன்னணியின் வசந்த சமரசிங்க மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவை முற்றிலும் திட்டமிட்ட சம்பவங்கள்.

அலரி மாளிகை மோதல் இவை அனைத்தும் திட்டமிட்ட சம்பவங்களா என்பதை தேடி அறிய வேண்டும். அனைத்தையும் துண்டு துண்டாக பிளவுப்படுத்தி போராட்டத்தை பலவீனப்படுத்துவதே ரணிலின் உத்தி எனவும் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025