தப்பி ஓடிய கோட்டாபய - பதுங்குகுழிக்குள் மகிந்த; அகதியாகச் செல்ல தயாராகும் பசில் - புபுது ஜாகொட

Parliament of Sri Lanka Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka SL Protest
By Kalaimathy Jul 16, 2022 07:53 AM GMT
Report

பொதுஜன பெரமுனவுக்கு தற்போது தலைமை இல்லை. கோட்டாபய ராஜபக்ச நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் மகிந்த ராஜபக்ச பதுங்குகுழிக்கு ஒளிந்துகொண்டிருக்கின்றார் என முன்னிலை சோசலிசக்கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார். 

இதேவேளை இலங்கையில் இருந்து எப்படி தப்பிக்க முடியும் என்று பசில் ராஜபக்ச விமான நிலையங்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றார். படகில் ஏறி அகதியாக இந்தியாவுக்கு செல்லவும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

ரணில் விக்ரமசிங்கவினால், பொதுஜன பெரமுனவுக்கு தலைமை தாங்க முடியும் என எவராவது நினைத்துக்கொண்டிருந்தால், அது பைத்தியகாரத்தனம். ஏனென்றால் பொதுஜன பெரமுனவின் வேலைத்திட்டங்கள் தற்போது முடிந்து விட்டது.

கோட்டாபயவை விட ரணிலின் நிலை மோசமாகும்

தப்பி ஓடிய கோட்டாபய - பதுங்குகுழிக்குள் மகிந்த; அகதியாகச் செல்ல தயாராகும் பசில் - புபுது ஜாகொட | Sri Lanka Podujana Peramuna Gotabaya Mahinda Ranil

கோட்டாபய ராஜபக்சவுக்கு நடந்ததை நாம் பார்த்தோம். இப்படியே சென்றால், இதனை விட மோசமான நிலைமை ரணில் விக்ரமசிங்கவுக்கு ஏற்படும். ரணிலால் நாடு சிவில் போரை நோக்கி தள்ளப்படும் ஆபத்து உள்ளது.

தனி நபரின் அதிகார ஆசைக்காக முழு நாட்டையும் அழிக்க இடமளிக்க முடியாது. பொது மக்களுக்கும், போராட்டகாரர்களுக்கும் இடையில் பிரிவினையை ஏற்படுத்துவது ரணிலின் திட்டம்.

பசில் ராஜபக்ச கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற போது குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் கடவுச்சீட்டில் முத்திரையிட மறுத்தனர். அவர்கள் போராட்டத்தில் இருந்தவர்கள் அல்ல, அதனை ஆசிர்வதித்தவர்கள்.

விமான சேவை நிறுவனங்கள் தமது விமானத்தில் பசில் ராஜபக்சவை ஏற்ற மறுத்தன. இந்த விமானப் பணிப்பெண்கள் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அல்ல. போராட்டத்திற்கு பொதுவாக மிகப் பெரிய ஆசிர்வாதம் இருந்தது.

மேலும் நாடாளுமன்றத்திற்கு அருகில் நடந்த சம்பவம் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து கட்சி என்ற வகையில் நாங்கள் விசாரணை நடத்துவோம். இரும்பு கம்பிகளால் இராணுவத்தினரை தாக்கும் தீர்மானம் எப்படி எடுக்கப்பட்டது.

போராட்டத்தின் போது துப்பாக்கிகளை பறித்தது யார்

தப்பி ஓடிய கோட்டாபய - பதுங்குகுழிக்குள் மகிந்த; அகதியாகச் செல்ல தயாராகும் பசில் - புபுது ஜாகொட | Sri Lanka Podujana Peramuna Gotabaya Mahinda Ranil

நாடாளுமன்றத்திற்கு அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தை தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்தது. அதற்கு வெளியில் இருந்து சம்பந்தப்பட்ட அமைப்பு எது. யார் துப்பாக்கிகளை பறித்தது.

பறித்த துப்பாக்கிகளுக்கு என்ன ஆனது. இதனை யார் செய்தார்கள் என்பதை நாங்கள் வெளியிடுவோம். அரசியல் ஆதரவுள்ள ஒரு நபருக்கு சொந்தமான பிரசார நிறுவனம் போராட்டகாரர்கள் இராணுவத்தை தாக்கினர் என்று தற்போது சமூக ஊடகங்களில் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளது.

இவற்றில் உள்ள தொடர்புகளை நாங்கள் விரைவில் அம்பலப்படுத்துவோம். இவை அனைத்தும் ரணில் விக்ரமசிங்கவின் விளையாட்டுக்கள். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கட்சி சார்பற்றவர்களுக்கும் அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களுக்கும் இடையில் மோதலை ஏற்படுத்துவது அவரது திட்டம்.

காவல்துறையினருக்கும் போராட்டகாரர்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தும் திட்டம். மக்கள் விடுதலை முன்னணியின் வசந்த சமரசிங்க மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவை முற்றிலும் திட்டமிட்ட சம்பவங்கள்.

அலரி மாளிகை மோதல் இவை அனைத்தும் திட்டமிட்ட சம்பவங்களா என்பதை தேடி அறிய வேண்டும். அனைத்தையும் துண்டு துண்டாக பிளவுப்படுத்தி போராட்டத்தை பலவீனப்படுத்துவதே ரணிலின் உத்தி எனவும் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

மயிலிட்டி தெற்கு, London, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

15 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், London, United Kingdom

06 Dec, 2024
மரண அறிவித்தல்

செட்டிகுளம், London, United Kingdom

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, புளியங்குளம், பண்டாரிக்குளம்

25 Nov, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

25 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, Ajax, Canada

25 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், நீர்கொழும்பு

21 Nov, 2025
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, அல்லாரை

22 Nov, 2025
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, பரிஸ், France, கனடா, Canada

26 Nov, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025